Tuesday, November 25, 2008

அரசமரம்


அரசமரப் பிள்ளையாரை கண்டால்
வணங்காமல் போனதில்லை

விநாயகர் வினை தீர்ப்பார் என்பதற்கல்ல...
அரசமரத்தை காப்பதொடு மட்டுமல்லாமல்,
அதை சுற்றிவந்து நீர் ஊற்ற வைத்தாரே!!!

இல்லை என்றால்
அது என்றோ விறகாகவோ...
வீட்டு முற்றமாகவோ மாறி இருக்ககும்

விநாயகரின் அருளால்...
அரசமரமும் ஆனது கடவுளாக!!!

சுற்றி வந்தால் பிள்ளை வரம் கொடுக்குமாம்
அரசமரம்...!!!

கவிதை

கவிதை எழுதும் அவா எனக்கு.
சிலர் கூறினார்கள் காதலிக்க வேண்டும் என்று...
பலர் கூறினார்கள் காதலித்து தோற்க வேண்டும் என்று...

தெளிவாக இருந்தால் கவிதை வராதோ!!!

Wednesday, November 19, 2008

மதம்...???

"நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல...
எல்லா மதமும் என்னை சார்ந்தது... ஓசோ "

Tuesday, November 18, 2008

ஓர் குட்டி கதை!!!

முன்பொரு காலத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார் அப்பொழுது சிறிய பூனை ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தது. சீடர்களின் கவனம் சிதறாமல் இருக்க அந்த பூனையை பிடித்து அருகில் இருந்த தூணில் கட்டிவைத்தார்.
இவ்வாறு தினமும் அந்த பூனையை தூணில் கட்டி வைத்துவிட்டு பாடம் நாடத்தினார். ஒரு நாள் அந்த முனிவர் இறந்து விட்டார். அவரை அடுத்து வந்தவர்களும் அதெபொல் செய்தனர். ஒரு நாள் அந்த பூனையும் இறந்து விட்டது. அனால் தினமும் பாடம் நடக்கும் போது ஒரு பூனையை கொணடுவந்து தூணில் கட்டி வைப்பதை அதேபோல் வழக்கமாக கொண்டனர் அவரை தொடர்ந்து வந்தவர்கள்.

இதுபோல் தான்... ஒரு வெற்று காகிதம் போல் எந்த எழுத்துக்களும் இல்லாமல் பிறக்கும் குழந்தையின் மீது இந்த உலகம் பல்வேறு வாழ்க்கை முறைகளை அச்சிடுகிறது. நாமும் அதையே தொடர்ந்து செய்து வருகிறோம்... ஏன்...! எதற்கு...!! என்று...!!! கேள்வி கேட்காமல்...