Friday, September 24, 2010

மரங்களை வளரவிடாதீர்கள்; வேருடன் வெட்டுங்கள்


சில சமயத்தில் பயனம்செய்யும்போது இந்த மரமாவது பசுமையாக எங்கும் காட்சி தருகிறதே என்று நினைபதுண்டு..., அனால் இதனை கொடுமை உள்ள மரம் என்று இன்று தான அறிந்தேன்.

இதற்க்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும். மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவரவேண்டியது அரசின் கடமை. இதைப்பற்றி சுகி சிவம் அவரது நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பே இதன் விளைவுகளை விளக்கியுள்ளார் என்பது இப்போதுதான் ஒரு செய்தி முலமாக தெரியவந்தது. இப்படி பலரும் பலமுறை பல இடங்களில் பேசத்தான் செய்துள்ளனர் அனால் எத்துனை பெருக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு உள்ளது?. எத்தனை விவசாயிகள் அல்லது கூழி தொளிலளில்கள் தினசரி நாளிதழ்களை படிக்கின்றனர்...? நாட்டு நடப்புகளைப்பற்றி கவலைப்படுகின்றனர். இது அரசின் கடமை. எவ்வளவுதான் வளர்ச்சிப்பணிகள் வந்தாலும் இலவசங்கள் கொடுக்கப்பட்டாலும் இதன் பதிப்பை நிறுத்தாவிட்டால் என்ன பயன்??...

இதற்க்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் நம் அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. திரைப்பட விழாக்களையும் பாராட்டு விழாக்களையும் நடத்திக்கொண்டுள்ளது. வேண்டாம் விடுங்க இதைப்பற்றி பேசினான் எழுதி முடியாது. எந்த அரசு வந்தாலும் இதே நிலைமைதான். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நாடென்ன செய்தது நமக்கு என்று நினைப்பதை விட நாமென்ன செய்தோம் என்று யோசிக்கலாமே? இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இங்கு நாம் போர்க்கொடி உயர்த்தினோம். அதுபோலத்தான் இதுவும்.


எதற்காக நாம் அரசின் நடவடிக்கைகளுக்காக காத்து இருக்கவேண்டும். நாம் ஏன் இதை துண்டு பிரசுரமாக அச்சிட்டு நமது சொந்த ஊர்களில் விநியோகம் செய்யகூடாது? என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டு இருப்பதைவிட ஏதாவது செய்யலாமே... நமது அடி முதல் அடியாக இருக்கட்டுமே.. நமது ஊர் பஞ்சாயத்து அல்லது பேரூர்ஆட்ச்சிகளின் மூலமாககூட இதை விநியோகம் செய்யலாம். இன்றைய காலத்தில் அதிக அக்கறையுடனும் எதாவது உபயோகமாக செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடனும் இருப்பவர்கள் நம் மாணவர்கள் அவர்களிடத்தில் இதை கொண்டு சேர்க்கலாம். எப்படியும் ஒரு விவசாயியோ அல்லது கூளித்தொளிலலியோ தனது மகனையோ அல்லது மகளையோ கனவுகளுடன் படிக்கவைத்துக்கொண்டு இருப்பார் கண்டிப்பாக இது அனைவரையும் சென்றடையும். நாம் ஒவ்வொருவரும் படித்துவிட்டு கருத்து கூருவதுடனும், கவலைப் படுவதுடனும் இல்லாமல் எதாவது செய்தோம் என்ற திருப்ப்தியவது இருக்கும் அல்லவா? நாம் தான் இந்த அரசாங்கத்தை சினிமா காரர்களுக்காக கொடுத்துவிட்டோம். அவர்களிடத்தி இருந்து ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. வேண்டுமென்றால் இன்னுமொரு மெகா பஜ்ஜெட் திரைப்படம்....!!!!


நாம் செயல்படுவதை பார்த்தாவது அவர்கள் செயல்படட்டுமே???. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் பூமியை நாமே காப்போம். -நன்றி

[P.S] If you have any other ideas to take action to fix this, Please post as response. Or if you think this way we can do something please share this with your friends. More than sharing if you act, that will be really great..... Thank you all.

Wednesday, September 22, 2010

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

"மனிதன் சுயநலவாதியாக வாழ்வது காற்றைவிட லேசானது",
"மனிதன் பொதுநலவாதியாக வாழ்வது மழையைவிட கடினமானது!"
[This post has been re-shared ]

Friday, September 10, 2010

மதமுன் நம் நம்பிக்கையும்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றில் உள்ள சாரம்சங்கள் ஒன்றே.
/*வரலாறுகளை பாருங்கள். சிலுவைப் போரில் இருந்து இன்றை போராடங்கள் வரை மதத்தின் போராட்டங்களாகவே தொடருகின்றன. */
இவையெல்லாம் இடையிலே வந்த்தவை. எப்போது மதத்தை வியாபாரமாக செய்தார்களோ அப்போது தோன்றியது. எங்கள் மதத்தில் சேருங்க ஒசிஎலே பிரயாணி போடுவோம் பணம் தருவோம், நிறைய குழந்தைகளை பெற்று மதத்தை பெருக்குங்கள் என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியபோது வந்தது.

எந்த மதமுன் எந்த உருவ வழிபாட்டையும் சொல்லவில்ல. பகவத் கீதா கூட சொன்னது ஒன்றுதான் நீ உன்னை அறியவேண்டும்.. எல்லமே ஒன்றுதான் அது தான் பரமாத்மா. கிருஷ்ணா ஒரு மன்னர் ஆதிகாலத்தில் மக்கள் மன்னரை கடவுளாக வழிபட்டனர் அதனால் அவர் இன்னும் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அவர்கள் அனைவரும் யோகா சித்து கலைகளை கற்றிருந்தனர். அதுபோலதான் ஏசுவை பற்றி சொல்லும்போதும் O அவர் ஒரு யோகி அதனால் தான் அவர் 3 நாட்கள்வரை உயிர்த்து இருக்கமுடிந்தது என்கின்றனர். அவர் அப்போது கூறிய சமத்துவ கருத்துக்களை அன்று வாழ்ந்த மக்கள் ஏற்க்கவில்லை அதனால் தேசத்துரோகியாக கருதப்பட்டார்.. அதுபோலதான் நபிகளும்..

நமக்கு மதத்தை போதித்த அனைவரும் கூறியது ஒன்றே.... நீ உன்னை அறியவேண்டும் அதற்க்கு இந்த மார்கத்தை நாடு ஏனென்றால் நான் இதைதான் நாடினேன்...

ஆனால் இப்போது கூட்டம் சேர்ப்பதற்காகவும் தொண்டு நிறுவனம் என்றபெயரில் பதுக்கல் செய்வதற்கும் பயன்படுத்தபடுகிறது. அதற்க்கு சில சித்து வேலைகளை அந்தந்த மதத்தினர் செய்து மக்களை ஈர்கின்றனர்.

ஆனால் வேதங்களும், மதங்கள் என்றபெயரில் சொல்லப்பட்ட கருத்துக்களும் நம்முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற பொக்கிசங்கள், அது காலப்போக்கில் திரிந்து விட்டது. திரிந்ததை பற்றி நாம் எதற்கு பேசவேண்டும்.
இந்த உண்மையை அறிந்தவர்கள் இந்த விவாதத்திற்கே வரமாட்டார்கள்.