Friday, April 1, 2011

கடவுளே எங்கள எப்படியாச்சும் காப்பாத்து....

தமிழ் நாட்டு மக்களே எப்படியய்ய ஊருக்குள்ள தன்மானத்தோடு இருக்கீங்க??? ஒருநாள் கொஞ்சநேரம் இந்த டிவி யை பார்த்ததுக்கே ரொம்ப கேவலமா இருக்கு, வேட்பாளர்கள் முஞ்சிஎல்லாம் பாத்தாலே அவங்க தகுதி என்னனு தெரியுது. இதவேற எப்போ பாத்தாலும் திரும்ப திரும்ப போட்டு காட்டுறாங்க. அவங்க அவங்களுக்கு ஒரு டிவி வேற. இந்த மோகரகட்டைங்கள நம்ம தமிழ்நாட்டோட தலை எழுத்தை மாற்றப் போகுதுங்க. நல்லவேளை நான் ஊருக்குள்ள இல்ல. கண்டிப்பா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். கூடிய சிக்கிரம் அது நடக்கும்.
விஜயகாந்த் வேட்பாளர்களை எல்லாம் பாத்தீங்களா, என்ன எதுன்னவது அவனுங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியல. பேப்பர கிழிச்சு போட்டு விசில் அடிச்சு கைதட்டி படம் பாத்தவன் எல்லாம் இன்னக்கி வேட்பாளர!!!!.... ஜெயலலிதா, விஜயகந்துனு இந்த ரெண்டு ரெண்டுகேட்டனுங்கள நம்பறதே வேற வழி இல்லாமதான். ஆனா அவரோட திரைமறைவில் இருக்குற இந்த அல்லக் கைகளெல்லாம், யாரு எவரு, என்ன தகுதி இருக்கு நம்பி ஓட்டு போடா.
கடவுளே எங்கள எப்படியாச்சும் காப்பாத்து....

No comments: