Friday, December 12, 2008

Software மாப்பிள்ளை

சுயநல வாதிகளின் கூடாறம்
இந்த மென்பொருள் துறை...
எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா..??
ஏனென்றால் நானும் ஒரு சுயநலவாதிதான்...

கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும்,
முகவரி கொடுத்தவனை மறந்து...
பறந்து இல்லை... இல்லை... தாவிச் செல்லும்
இதயமற்றவனுக்கு பெயர்
software engineer

விடியவிடிய வேலை பார்ப்பான்,
வெளிநாட்டினர் சுகமாய் வாழ!

சம்பாதித்ததை கொண்டுபோய்
"சால்சா"வில் தொலைப்பான்..

மூளை இருந்தும்...
முதுகெலும்பு இல்லாதவன்.

ஒருமுறை பறந்து சென்று
வந்துவிட்டால் போதும்...
50 சவரனில் இருந்து 100 ஆக்கி
அவனையே விற்றுக்கொள்வான்...

ஆனால் வாங்கத்தான் ஆளில்லை...
வேலை இல்லாதவனங்கள,
யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...???

Monday, December 1, 2008

நானும் அவளும்

முதல்நாள் வகுப்பறை நுழைந்ததும்
பரிச்சயமே இல்லாத இடத்தில்
பளிச்சென்று உன் புன்னகை
கட்டி இழுத்து உன் அருகே அமரச்செய்தது...

நான் இருக்கின்றேன் என்று கைகோர்த்து
உன் மீது காதல் கொள்ளச்செய்தாய்...!

நாம் சுற்றித்திரிந்ததில்
தேய்ந்து போயின தெருக்கள்
நாம் சிரிப்பொழி தாங்கியபடி...

நீ இருக்கும் இதயத்தை
யாருக்கும் தர விருப்பம் இல்லை !

என் காதல் வட்டம் பறந்து விறிந்தது
உன்னை மட்டுமே சுற்றி...

துக்கத்தில் சிரித்ததும்
சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து அழுததும்
உன்னிடத்தில் மட்டுமே...!!!

உன் மகளுக்கு நான் மாமியார்
என் மகன் உனக்கு மருமகன்
என்றதற்க்கு....
ஒருவனையே மணந்துகொண்டு
என்றும் பிரியாமல் இருப்போம்
என்று கைகொட்டி சிறித்தாயே!!!

மணப்பெண் தோழியாய் நிற்ப்பாய்
என் புது வாழ்வு தொடங்கும் பதற்றத்தை
பக்கத்திலிருந்து தனிப்பாய்
என்றாயே!!!!

இத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு
எங்கேயடி சென்றாய்...???

உன்னைத் தேடித் திறிந்து
இந்த உலகமே தீர்ந்து போயிற்று...
உன் மூச்சுக் காற்றை கூட காணோமே!!!

என் உயிர் தோழியே...
இந்த மாபெரும் உலகத்தில்
உன் ஒருத்திக்கு மட்டும் தான்
இடம் இல்லாமல் போயிற்றா...???

காதலில் தோற்றதால்
காடு சென்றாயே!!!

என் காதலுக்கு என்ன பதில்
சொல்லப்போகிறாய்...???

Tuesday, November 25, 2008

அரசமரம்


அரசமரப் பிள்ளையாரை கண்டால்
வணங்காமல் போனதில்லை

விநாயகர் வினை தீர்ப்பார் என்பதற்கல்ல...
அரசமரத்தை காப்பதொடு மட்டுமல்லாமல்,
அதை சுற்றிவந்து நீர் ஊற்ற வைத்தாரே!!!

இல்லை என்றால்
அது என்றோ விறகாகவோ...
வீட்டு முற்றமாகவோ மாறி இருக்ககும்

விநாயகரின் அருளால்...
அரசமரமும் ஆனது கடவுளாக!!!

சுற்றி வந்தால் பிள்ளை வரம் கொடுக்குமாம்
அரசமரம்...!!!

கவிதை

கவிதை எழுதும் அவா எனக்கு.
சிலர் கூறினார்கள் காதலிக்க வேண்டும் என்று...
பலர் கூறினார்கள் காதலித்து தோற்க வேண்டும் என்று...

தெளிவாக இருந்தால் கவிதை வராதோ!!!

Wednesday, November 19, 2008

மதம்...???

"நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல...
எல்லா மதமும் என்னை சார்ந்தது... ஓசோ "

Tuesday, November 18, 2008

ஓர் குட்டி கதை!!!

முன்பொரு காலத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார் அப்பொழுது சிறிய பூனை ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தது. சீடர்களின் கவனம் சிதறாமல் இருக்க அந்த பூனையை பிடித்து அருகில் இருந்த தூணில் கட்டிவைத்தார்.
இவ்வாறு தினமும் அந்த பூனையை தூணில் கட்டி வைத்துவிட்டு பாடம் நாடத்தினார். ஒரு நாள் அந்த முனிவர் இறந்து விட்டார். அவரை அடுத்து வந்தவர்களும் அதெபொல் செய்தனர். ஒரு நாள் அந்த பூனையும் இறந்து விட்டது. அனால் தினமும் பாடம் நடக்கும் போது ஒரு பூனையை கொணடுவந்து தூணில் கட்டி வைப்பதை அதேபோல் வழக்கமாக கொண்டனர் அவரை தொடர்ந்து வந்தவர்கள்.

இதுபோல் தான்... ஒரு வெற்று காகிதம் போல் எந்த எழுத்துக்களும் இல்லாமல் பிறக்கும் குழந்தையின் மீது இந்த உலகம் பல்வேறு வாழ்க்கை முறைகளை அச்சிடுகிறது. நாமும் அதையே தொடர்ந்து செய்து வருகிறோம்... ஏன்...! எதற்கு...!! என்று...!!! கேள்வி கேட்காமல்...