Tuesday, November 18, 2008

ஓர் குட்டி கதை!!!

முன்பொரு காலத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார் அப்பொழுது சிறிய பூனை ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தது. சீடர்களின் கவனம் சிதறாமல் இருக்க அந்த பூனையை பிடித்து அருகில் இருந்த தூணில் கட்டிவைத்தார்.
இவ்வாறு தினமும் அந்த பூனையை தூணில் கட்டி வைத்துவிட்டு பாடம் நாடத்தினார். ஒரு நாள் அந்த முனிவர் இறந்து விட்டார். அவரை அடுத்து வந்தவர்களும் அதெபொல் செய்தனர். ஒரு நாள் அந்த பூனையும் இறந்து விட்டது. அனால் தினமும் பாடம் நடக்கும் போது ஒரு பூனையை கொணடுவந்து தூணில் கட்டி வைப்பதை அதேபோல் வழக்கமாக கொண்டனர் அவரை தொடர்ந்து வந்தவர்கள்.

இதுபோல் தான்... ஒரு வெற்று காகிதம் போல் எந்த எழுத்துக்களும் இல்லாமல் பிறக்கும் குழந்தையின் மீது இந்த உலகம் பல்வேறு வாழ்க்கை முறைகளை அச்சிடுகிறது. நாமும் அதையே தொடர்ந்து செய்து வருகிறோம்... ஏன்...! எதற்கு...!! என்று...!!! கேள்வி கேட்காமல்...

1 comment:

விஜய் said...

பின்னால் வந்தவர்கள்
பூனையை கட்டி போட்டால் புலன்களையும் கட்டியதாக நினைத்தார்கலோ?