Friday, September 10, 2010

மதமுன் நம் நம்பிக்கையும்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றில் உள்ள சாரம்சங்கள் ஒன்றே.
/*வரலாறுகளை பாருங்கள். சிலுவைப் போரில் இருந்து இன்றை போராடங்கள் வரை மதத்தின் போராட்டங்களாகவே தொடருகின்றன. */
இவையெல்லாம் இடையிலே வந்த்தவை. எப்போது மதத்தை வியாபாரமாக செய்தார்களோ அப்போது தோன்றியது. எங்கள் மதத்தில் சேருங்க ஒசிஎலே பிரயாணி போடுவோம் பணம் தருவோம், நிறைய குழந்தைகளை பெற்று மதத்தை பெருக்குங்கள் என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியபோது வந்தது.

எந்த மதமுன் எந்த உருவ வழிபாட்டையும் சொல்லவில்ல. பகவத் கீதா கூட சொன்னது ஒன்றுதான் நீ உன்னை அறியவேண்டும்.. எல்லமே ஒன்றுதான் அது தான் பரமாத்மா. கிருஷ்ணா ஒரு மன்னர் ஆதிகாலத்தில் மக்கள் மன்னரை கடவுளாக வழிபட்டனர் அதனால் அவர் இன்னும் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அவர்கள் அனைவரும் யோகா சித்து கலைகளை கற்றிருந்தனர். அதுபோலதான் ஏசுவை பற்றி சொல்லும்போதும் O அவர் ஒரு யோகி அதனால் தான் அவர் 3 நாட்கள்வரை உயிர்த்து இருக்கமுடிந்தது என்கின்றனர். அவர் அப்போது கூறிய சமத்துவ கருத்துக்களை அன்று வாழ்ந்த மக்கள் ஏற்க்கவில்லை அதனால் தேசத்துரோகியாக கருதப்பட்டார்.. அதுபோலதான் நபிகளும்..

நமக்கு மதத்தை போதித்த அனைவரும் கூறியது ஒன்றே.... நீ உன்னை அறியவேண்டும் அதற்க்கு இந்த மார்கத்தை நாடு ஏனென்றால் நான் இதைதான் நாடினேன்...

ஆனால் இப்போது கூட்டம் சேர்ப்பதற்காகவும் தொண்டு நிறுவனம் என்றபெயரில் பதுக்கல் செய்வதற்கும் பயன்படுத்தபடுகிறது. அதற்க்கு சில சித்து வேலைகளை அந்தந்த மதத்தினர் செய்து மக்களை ஈர்கின்றனர்.

ஆனால் வேதங்களும், மதங்கள் என்றபெயரில் சொல்லப்பட்ட கருத்துக்களும் நம்முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற பொக்கிசங்கள், அது காலப்போக்கில் திரிந்து விட்டது. திரிந்ததை பற்றி நாம் எதற்கு பேசவேண்டும்.
இந்த உண்மையை அறிந்தவர்கள் இந்த விவாதத்திற்கே வரமாட்டார்கள்.

No comments: